Face Book LIKE

Saturday, October 31, 2009

"Bhaja Govindham"





"Bhaja Govindham"

As anyone knows, "Bhaja Govindham" is the famous hymn by ADHI SHANKARACHARYA, the Great Master of the ADVAITHA principle of Philosophy! 'Advaitha' means 'that which is not 'Dhwaitha (TWO)! As per his principle there are no two different things about the 'Atman', that is 'Soul'. Birth,Death,Process of Life in this world, everything is a myth! By constant practice of chanting the name of THE LORD and by anchoring our mind on HIM, at one point of time, the soul attains salvation, understanding what is ONENESS! All through the hymn, it sanctifies the significance of chanting the name of The Lord Govindha!
You can enjoy the beautiful original version in Sanskrit , sung by Dr M S Subbulakshmi in her melodious voice, by clicking the following link !

Bhaja Govindam by M.S.Subbulakshmi


Following is my humble presentation in Tamil. I won't say it is a translation and I am too meagre a person for the task. It is just an inspiration of the original thought!


பஜ கோவிந்தம்
கோவிந்தனை நினை கோவிந்தனை நினை
கோவிந்தனை நினை மூடமனதே
இலக்கண அறிவால் பயனொன்றில்லை
இறையறி வொன்றே இறுதியில்துணையாம் (கோவிந்தனை நினை)

தனம்பெற வேண்டும் தணியாதாகம்
தனைவிட் டொழிப்பாய் சஞ்சலமனமே
ஆசைகளின்றி அற்புதம் காண்பாய்
அடைந்ததைக் கொண்டே ஆவல்தணிப்பாய் (கோவிந்தனை நினை)

மாதரின் மீதுறும் மயக்கம் மறுப்பாய்
மங்கைய ருடல்வெறும் மாமிச மன்றோ
கண்களை மறைக்கும் காமத்தை அழிப்பாய்
உண்மையின் அறிவே உன் நலம் அறிவாய் (கோவிந்தனை நினை)

தாமரை யிலையில் தண்ணீர் போலே
நிலயற்ற வாழ்வே நிலையிந்த உலகில்
தணியா தாகம் சோகம் நோயென
அனைத்தும் துளைக்கும் அழிவுறும் வாழ்விது (கோவிந்தனை நினை)

காசும் பணமும் கையிருக்கும் வரை
காலைச் சுற்றிடும் ஆயிரம் உறவு
கைப்பொருள் தீர்ந்து தேகமும் தளர்ந்தால்
கலைந்திடும் உறவுகள் மெய்ப்பொருள் அறிவாய் (கோவிந்தனை நினை)

காயத்தினுள்ளே காற்றுள்ள வரைதான்
கவலை கருத்து காரியம் எல்லாம்
காற்றுப் பிரிந்தால் காயம் கண்டே
கட்டிய மனைவியும் கலக்கம் கொள்வாள் (கோவிந்தனை நினை)

பிள்ளைப் பருவம் வெறும்விளை யாட்டில்
பருவம் வந்தால் பாலுணர்வே தான்
மூப்புக் காலம் முழுதும் கவலையில்
மூடமனிதனுக் குணர்விலை இறையில் (கோவிந்தனை நினை)

மனைவியும் மக்களும் யாரென நினைப்பாய்
எங்கிருந் தாய்நீ ஏனிங்கு வந்தாய்
விசித்திர உறவுகள் விளக்கம் அறியாய்
வீடுபே றென்பதை இனிநீ நினைப்பாய் (கோவிந்தனை நினை)

மறுபடி மறுபடி பிறப்பும் இறப்பும்
மறுபடி மறுபடி கருவினி லுறக்கம்
முடிவொன் றிலையிவ் வாழ்வின் வண்ணம்
முயன்றா லருள்தரும் முகுந்தன் திண்ணம் (கோவிந்தனை நினை)

நல்லோர் உறவால் பற்றினை ஒழிப்பாய்
பற்றின் மையினால் மாயைக ளழிப்பாய்
மாயைக ளொழிந்திட உண்மைகள் விளங்கும்
உண்மைகள் விளங்கிட உயிர்வீ டடையும் (கோவிந்தனை நினை)

வயதும் கூடிட வாலிபம் மறையும்
வற்றிடு நீரால் ஏரியும் காயும்
செல்வம் சென்றால் சேர்ந்தோர் மறைவார்
உண்மையை உணர்ந்தால் உறவுகள் மறையும் (கோவிந்தனை நினை)

தானெனும் அகந்தை தனைநீ மாற்று
தன்னுடை மைகள் எனும்நினை வகற்று
அனைத்தயும் காலம் அழித்திடும் உணர்ந்து
அறிவைச் செலுத்து அகமே ப்ரம்மம் (கோவிந்தனை நினை)

இரவும் பகலும் இன்னும் சுழலும்
கால வெள்ளம் கரைபுரண் டோடும்
மாறும் உலகின் மாயையில் மனிதன்
ஆசைக் காற்றால் அலைக்கழி கின்றான் (கோவிந்தனை நினை)

காமம் செல்வம் எனும்பா வத்தின்
கைகளில் வீழ்ந்தே மரித்திடும் மனிதா
ஞானிகள் தொடர்பெனும் தோணியின் துணையால்
பிறவித் துயரெனும் பெருங்கடல் கடப்பாய் (கோவிந்தனை நினை)




--k.balaji march 18 1990 sunday 9.00 pm--

Friday, October 30, 2009

குருவாயூர் ஏகாதசி (GURUVAYOOR EKADHASI)





"GURUVAYOOR EKAADHASHI" (குருவாயூர் ஏகாதசி...)

May be, so many of us would have heard the wonderful devotional song "Guruvayoor Ekadhashi thozhuvaan pOgunnu" in Malayalam sung by Jesudas for the Album named "Vanamaala".

A Tamil Translation of the song , followed by the original song in Malayalam Lyrics and Video, are given below..

            
குருவாயூ ரேகாதசி தொழவே நடக்கின்றேன்
வழிகாட்டும் வழிகாட்டும் நாரயண னுருவம்
தளரும்போ தாத்மாவாம் பசுவேநின் நாவில்
அமுதம்போல் ஊறட்டும் நாராயண நாமம்
ஹரிநாராயண நாமம் (குருவாயூர்)

மாலைகள் உனக்காகப் பீதாம்பரம் நெய்யும்-அதி
காலைகள் உனக்காகப் பாலாகப் பொழியும்
புல்லாங்குழல் நாதம்தான் காடெல்லாம் பகவான்
அணியும்மயில் பீலித் திருமுடியோகார் மேகம்
திருமுடியோகார் மேகம் (குருவாயூர்)

கருடன்தன் சிறகைவிரித் தாற்போலேவானம்-தன்
வில்வண்ணம் நின்மார்பில் மாலைகள் ஆக்கும்
கண்திறந்தால் காணுமிடம் எல்லாமே நீதான்
குருவாயூ ரப்பாநின் விளையாடல் கள்தான்
திரு விளையாடல் கள்தான் (குருவாயூர்)

---k balaji, November 26 1985, 6 a.m.---


 ഗുരുവായൂർ ഏകാദശി തൊഴുവാന് പോകുമ്പോഴ്
വഴികാട്ടുക വഴികാട്ടുക നാരായണ രൂപം
തളരുമ്പോ ഴാത്മാവാം പശുവേനിൻ നാവിൽ
അമ്രുതമ്പോ ലൂറീടുക നാരായണ നാമം               (ഗുരുവായൂര്)

നെയ്യുന്നു പീതാമ്പര മീസൻദ്ധ്യക ളാവാം
പൈയ്യെല്ലാം വാർക്കുന്നു പാൽ മാധുരിയല്ലോ
ഓടക്കുഴ ലൂതുന്നു കാടെല്ലാം ഭഗവാൻ
ചൂടുന്നൊരു പീലിത്തിരു മുടിയോ മഴമേഘം        (ഗുരുവായൂര്)

ഗരുഡൻപോ ലാകാശം ചിറകാർന്നീ ടുമ്പോൾ
വനമാലകൾ തീർക്കുന്നു മഴവില്ലുക ളിപ്പോൾ
നിറകണ്ണാൽ കാണുന്നേ നെങ്ങെങ്ങും ഭഗവാൻ
ഗുരുവായൂ രപ്പാനിൻ ക്രുഷ്ണാട്ടം മാത്രം
                         നിൻ ക്രുഷ്ണാട്ടം മാത്രം                   (ഗുരുവായൂർ)




Thursday, October 29, 2009

இனிமைப் பத்து, an almost translation of Madhurashtakam





The famous "Madhurashtakam" in Sanskrit was written by Shri Vallabhacharya . Madhurashtakam speaks about the eternal beauty of Lord Krishna . It tells that each and every part of HIM is so SWEET (Madhuram). It ironically means that finally the union with the LORD is Eternal Bliss, which is not so easy without constant trial for the same !

Here goes the video song of Original 'Madhurashtakam'  with Music and Orchestra composed in a different style, with a wonderful rendition . A very melodious and enjoyable one !

Music: Arun GS Orchestration: Vid. K V Krishna Prasad Vocals: Nagendra R

https://www.youtube.com/watch?v=vWH5kAnolKg

Following is the Madhurashtakam (I call it "Inimai Pathu") written by me in TAMIL. I won't say it is a full translation, but the original one in Sanskrit is the inspiration for this!

இனிமைப் பத்து !

உதடுகள் இனிமை உருவம் இனிமை
கண்கள் இனிமை காட்சியும் இனிமை
உள்ளம் இனிமை எண்ணமும் இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

திருமுகம் இனிமை திருமுடி இனிமை
திருமுடி தனிலே பீலியும் இனிமை
திருநெற் றியிலே திலகமும் இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

திருமுகம் தனிலே இருவிழி இனிமை
இருபுறம் ஆடும் குண்டலம் இனிமை
இரவின் நிறத்தில் இது ஒரு இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

கோமள வதனத்தில் கொழிப்பது இனிமை
கொஞ்சிடும் கண்களின் மொழியோ இனிமை
குயிலே நாணும் குரலில் இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

துளசி மணிமலர் மாலை இனிமை
துலங்கும் பீதாம் பரமோ இனிமை
துவளும் அரைஞாண் ஒளியே இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

இலங்கும் கைகால் அணிகலன் இனிமை
இடக்கை தனிலே குழலோ இனிமை
உருகா வெண்ணெய் ஒருகரத் தினிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

திருப்பா தங்களில் சலங்கை இனிமை
சலங்கையின் சப்தம் தனிலோ ரினிமை
குழந்தை இனிமை குவலயம் இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

சுதர்சன சக்கரஒளிதரும் இனிமை
சுற்றிலும் எங்கும் சங்கொலி இனிமை
திருவிளக் கிலங்கும் எழிலே இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

ஆயர் பாடியின் அழகே இனிமை
அதில்விளை யாடிடும் ஆயன் இனிமை
கோபியர் இனிமை கோகுலம் இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை

அவன்நினை வினிமை அவன்பெயர் இனிமை
அவன்நினை வினிலே வரும் இசை இனிமை
அவனருள் இனிமை அகிலமும் இனிமை
இனிமையின் தலைவன் இனிமைக்கு இனிமை


--March 15 1991 K.Balaji  

Transliterated in Malayalam :
ഇനിമൈപത്തു

ഉദടുകൾ ഇനിമൈ  ഉരുവം ഇനിമൈ 
കൺകൾ  ഇനിമൈ  കാക്ഷിയും ഇനിമൈ
ഉള്ളം ഇനിമൈ എണ്ണമും ഇനിമൈ
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

തിരുമുഖം ഇനിമൈ തിരുമുടി ഇനിമൈ
തിരുമുടി തനിലേ പീലിയും ഇനിമൈ
തിരുനെട്രിയിലെ തിലകമും ഇനിമൈ
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

തിരുമുഖം തനിലേ ഇരുവിഴി ഇനിമൈ
ഇരുപുറം ആടും കുണ്ടലം ഇനിമൈ 
ഇരവിൻ  നിറത്തിൽ ഇതു ഒരു ഇനിമൈ
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

കോമള വധനത്തിൽ കൊഴിപ്പതു ഇനിമൈ
കൊഞ്ചിടും കണ്കളിന് മൊഴിയോ ഇനിമൈ
കുയിലേ നാണും കുരലിൽ ഇനിമൈ
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

തുളസി മണിമലർ മാലൈ ഇനിമൈ
തുലങ്കും പീതാം പരമോ ഇനിമൈ
തുവളും അറൈഞാൺ ഒളിയേ ഇനിമൈ
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

ഇലങ്കും കൈകാൽ അണികലൻ ഇനിമൈ 
ഇടക്കൈ തനിലേ കുഴലോ ഇനിമൈ 
ഉരുകാ വെന്ന്ണെയ് ഒരുകരത്തിനിമൈ 
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

തിരുപ്പാ ദങ്കളിൽ  ശലങ്കൈ ഇനിമൈ
ശലങ്കൈയിൻ ശബ്ദം തനിലോ റിനിമൈ 
കുഴന്തൈ ഇനിമൈ കുവലയം ഇനിമൈ 
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

സുദർശന ചക്കര ഒളി തരും ഇനിമൈ 
ചുട്രിലും എങ്കും ശങ്കൊലി ഇനിമൈ
തിരുവിളക്കിലങ്കും എഴിലേ ഇനിമൈ
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

ആയർ പാടിയിൻ അഴകേ ഇനിമൈ
അതിൽവിളൈ യാടിടും ആയൻ ഇനിമൈ 
ഗോപിയർ ഇനിമൈ ഗോകുലം ഇനിമൈ 
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 

അവൻനിനൈ വിനിമൈ അവൻപെയ റിനിമൈ 
അവൻനിനൈ വിനിലേ വരും  ഇസൈ ഇനിമൈ 
അവനരുൾ ഇനിമൈ  അഖിലമും  ഇനിമൈ 
ഇനിമൈയിൻ തലൈവൻ ഇനിമൈക്കു ഇനിമൈ 


----കേ.ബാലാജി 


Wednesday, October 28, 2009

கங்கா ப்ரவாஹம்

பூமியிலே புரண்டு வருகிற புண்ணிய நதியாம் கங்கையைப்பற்றி நான்கு வரிகள் எழுத நேர்ந்தது ஒரு பாக்கியம் என்று கருதுகிறேன் ! கங்கா ப்ரவாஹத்தைப்பற்றிய ஒரு வீடியோவையும் கீழே காணலாம்:

கங்கா ப்ரவாஹம்
மாதொரு பாகன் மன்னிய சிவனார்
விரிசடை மீதிருந்தே
மாது கங்கை மாறா ஒளியுடன்
மண்ணதி லேவீழ்ந்தாள் !

வீழ்ந்திடு கங்கைதன் வெள்ள மதிலே
மூழ்கிடு மானுட ரின்
வினைகள் தீர்க்கும் விளையாட் டதனை
வீறுடன் தொடங்கிட்டாள்!

ஓவென் றிரைச்சலாம் ஓங்காரத்துடன்
ஓயாப் பணி புரிந்தே
உலகம் புரந்திட உமையவள் நாதன்
உயிரா யனுப்பிவைத் தான் !

அன்பே உருவாம் அரும்பழ மென்னும்
அண்ண லிடமிரு ந்தே
புறப்படு கங்கை புண்ணிய நதியெனும்
புகழுட லெடுத் தாளே !

போகும் வழியில் புண்ணிய கங்கை
புகலிடம் தேடி வந்த
புல்லையும் கல்லையும் கூடத் தனது
புணர்ச்சியில் விளக்கிட்டாள் !

பருவம் என்னும் போராட் டத்தால்
பகலவன் காய்ந்தா லும்
உருவம் மாறா துயிர்களைக் காக்க
ஊற்றாய் பெருகிட்டாள்!


உயிர் பிரிந்தேக உடல் மண் ணாக
உலகினர் விடைகூ றிக்
காசியெனும் வழிச் செல்லும் கங்கையில்
கரைத்தே கடன் தீர்ப் பார் !

அசுத்தம் என்றே அனைவரும் கருதும்
அச்சுமை தானேற் கும்
பொறுமை மிகுந்த புண்ணிய மாது
புவியென வாழிய வே !

வற்றா நதியாய் வாழும் நதியாய்
வந்தே உயிர்காக் கும்
பெற்றா யெனவே பேணியே நாமும்
போற்றித் துதிப்போமே !

காளியன்னை தான் தன் கருணையை
கங்கை வெள்ள மதில்
கலந்திடச் செய்தே கலிதீர்த்தா ளென
வணங்கிப் போற்று துமே !

--பாலாஜி--

Monday, October 26, 2009

"SHANMUKHA ENDRU...."



Great Ragas: Shanmukhapriya

Posted using ShareThis
Please refer to the above link wherein you can find details and demonstration of Raga SHANMUKHAPRIYA wonderfully sung and explained.
A song composed by me, which I have tried in the above raga is given below :


ஷண்முகா என்று சரவணன் பெயர் சொன்னால்
ச்ஙகடங்களெல்லாம் சடுதியில் தொலைந்திடும்
(ஷண்முகா)
ஆறுமுகனைக் காணும் ஆவல் மிகுதியில்
அற்பன்நான் அவன் பெயர் அனுதினமும் புகல்வேன்
அன்னைஉமை பாலன் அருள்செய்வான் என்றவன்
அன்பினை வேண்டியே அருந்தவம் புரிந்தேன்
(ஷண்முகா)
தந்தை சங்கரனுக்கு தத்துவப் பொருள்சொன்ன
தண்டா யுத பாணியே
தற்குறி எந்தனுக்கும் சொற்பொருள் வளம்தந்து
பொற்பதம் பாடிடும் செயல் பணித்தான்
அண்ணலின் அருள்வேண்டியே நான்
அவன்புகழ் தினம் பாடுவேன்
வள்ளியின் நாயகன் அவன்
வல்வினை தீர்ப்பவன் (ஷண்முகா)

கருணை உள்ளம் !




ராகம் : ஹிந்தோளம் பாடல் : பாலாஜி

கண்களில் தெரியுது கருணை உள்ளம்-அவள்
கரங்களின் மூலம் காவல் பலம்
உள்ளத்தில் பெருகுது உவகையின் ஊற்று
உமையாம்பிகயின் நாமத்தைப் போற்று
(கண்களில்)

போற்றிடும் நாமமே சொல்லிடும் சேதி
போகும் வழியே புண்ணிய வீதி
ஸர்வமும் அவளே என்று நீ ஓதி
சக்தியின் பெயர் சொன்னால் செத்திடும் பீதி
(கண்களில்)

உள்ளம் உருகி உமைதனை நினைப்பாய்
உலகம் காக்கும் பரம்பொருள் அவளே
கல்லினுள் தேரை கருப்பையில் உயிரை
காவல் கரம் கொண்டு காப்பவள் அவளே
(கண்களில்)

காக்கும் சக்தியின் கடைவிழிப் பார்வை
கவலைகள் நீக்கும் காலமாம் போர்வை
காலமாம் சக்தியும் கமலாம்பிகை கையில்
வினைகள் அகலும் விமலையைத் துதிக்கையில்
(கண்களில்)